Header

Sri Lanka Army

Defender of the Nation

16th April 2018 14:42:35 Hours

வவுனியாவில் புத்தாண்டு நிகழ்வுகள்

இனிய புத்தாண்டை வரவேற்கும் முகமான வவுனியா நகரத்தில் அமைந்துள்ள வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் வன்னி பாதுகாப்பு படையினரின் ஓழுங்கமைப்பில் இப் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த (10) ஆம் திகதி செவ்வாய் கிழமை வவுனியா நகராட்ச்சி சபை விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இப் புத்தாண்டு நிகழ்வில் கடற் படையினர், விமானப் படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், அரசாங்க நிறுவனங்கள், மற்றும் தொழிற்சங்கத்தினர், மற்றும் அனைத்து சிவில் அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்கியதுடன் வவுனியா மாவட்ட செயளாலர் சோமரத்ன விதானபதிரன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய வவுனியா மாவட்ட செயளாகத்தினரின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்டது.

இப் புத்தாண்டு நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டி மற்றும் சைக்கில் ஓட்ட போட்டியானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. ஆதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்ட செயளாலர் சோமரத்ன விதானபதிரன அவர்களினால் தேசிய கொடியேற்றி நிகழ்வு ஆரம்பமானதுடன் கிராமத்து வீடு, வலுக்கு மரம் ஏறுதல், கொட்டா போரய, கயறு இழுத்தல், விநோத உடைப் போட்டிகள், பெலுன் ஊதுதல், போன்ற சம்பிரதாய வினோத விளையாட்டு போட்களும் இடம் பெற்றது.

பௌத்தம், இந்து, கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மத தலைவர்களின் ஆசிர்வாதங்களுடன் இடம் பெற்ற இந் நிகழ்விற்கு வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னக்கோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான டி.எம்.எஸ்.எம். தென்னக்கோன் மற்றும் பிரதேச செயளாலர்கள் முப்படை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட பல பிரதான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்களினால் வவுனியா மாவட்டத்தின் 4000 க்கும் மேற்பட்ட சிவில் மக்களுக்கு மதிய உணவு வழங்கியதோடு நெஸ்லே லங்கா நிறுவனத்தினர் மற்றும் நெஸ்டமோல்ட் நிறுவனத்தினர் மற்றும் தேசிய தொலைகாட்ச்சி ரூப்பவாஹினியும் முழு அனுசரனையும் வழங்கினார்கள்.

trace affiliate link | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp