Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2017 10:55:17 Hours

பாகிஸ்தான் மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான கலந்துரையாடல்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான நான்காம் முறையாக இடம் பெறும் கலந்துரையாடல் பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை சமிக்ஞை படைத் தலைமையகத்தில் கடந்த சனிக் கிழமை (23) இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலில் எதிர்காலத்தில் அமையப் பெறும் செயற்திட்டங்கள் மற்றும் நவீன தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகள் மேலும் அதனை எவ்வாறு இலங்கையில் பயனுள்ள வகையில் செயற்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

பாகிஸ்தான் இராணுவத்தினர் ஆறு பேர் உள்ளடங்கிய குழுவிற்கு தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஹாபிஸ் உர் ரெஹ்மான் மற்றும் இக் குழுவினரை இராணுவ சமிக்ஞை படையணியின் தகவல் தொழில்நுட்ப பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிரபாத் தெமடன்பிடிய அவர்கள் வரவேற்றார்.

இதன் போது இப் பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை இலங்கை இராணுவ சமிக்ஞை படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இவ் அதிகாரிகளை வரவேற்பதற்காக சமிக்ஞை படையணியின் 18 உயர் அதிகாரிகள் உள்ளடங்களாக இதன் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க . இராணுவ பகுப்பாய்வு மற்றும் அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் ரேணுக ரொவெல் .இராணுவ சமிக்ஞை படையணியின் தகவல் தொழில்நுட்ப பணியகத்தின் பணிப்பாளர் . சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் திலக் வைத்தியரத்தின . மேலும் பல உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

மேலும் இப் பிரதிநிதிகள் இராணுவ பதவிநிலைப் பிரதானியவர்களைச் சந்திக்கவூள்ளதுடன் பாகிஸ்தானின் உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் ஹாபிஸ் உர் ரெஹ்மான் அவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டு கட்டளை அதிகாரியாகவும் . தொடர்பாடல் கணினி மற்றும் புலனாய்வு பணியக தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகவும் காணப்படுகின்றார்.

Best jordan Sneakers | adidas