15th October 2024 20:49:14 Hours
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 14 ஒக்டோபர் 2024 அன்று 1 வது இயந்திரவியல் காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியை சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றதுடன், இயந்திரவியல் காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
தனது வருகையின் போது, படையணியின் படைத் தளபதி மரக்கன்று ஒன்றை நட்டதுடன், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் விரிவான விளக்கக்காட்சி, முகாம் வளாகத்தை பார்வையிடல் மற்றும் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்து மற்றும் மதிய உணவு விருந்துபசாரம் என்பவற்றில் கலந்து கொண்டார். படையினருக்கான உரையுடன் அவரது விஜயம் நிறைவடைந்தது.
இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.