Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2024 12:07:30 Hours

விசேட படையணியினரால் சிரமதான பணி

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 07 ஒக்டோபர் 2024 அன்று மாத்தளையில் உள்ள பௌத்த பெண்கள் சிறுவர் மேம்பாட்டு நிலையத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இம் முயற்சியானது சிறுவர் மேம்பாட்டு நிலையத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுடன் இங்கு வசிக்கும் சிறுவர்களின் வாழ்க்கை சூழலை மேம்படுத்துவதாகும். சிறுவர்களை மகிழ்விக்க பரிசுப் பொதிகளும் விநியோகிக்கப்பட்டது, இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.