09th October 2024 12:25:34 Hours
முதலாம் படையின் 5வது தளபதியான மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் ஓய்வுபெறும் நிலையில் 05 ஒக்டோபர் 2024 அன்று கிளிநொச்சி 1ம் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இராணுவ சம்பிரதாய நிகழ்வின் போது தனது கடமைகளை ஒப்படைத்தார்.
இதன் போது நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து 1 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
வெளிசெல்லும் தளபதி அலுவலக வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பு ஆவணங்களை வழங்கியதை தொடர்ந்து குழு படம் எடுத்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, 1ம் படையின் படையினருக்கு உரையாற்றிய அவர், தனது பதவிக்காலத்தில் அவர்கள் வழங்கிய உதவிகளுக்கு அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், மேலும் படையின் நன்மைக்காகவும் நற்பெயருக்காகவும் தங்கள் அர்ப்பணிப்பைத் தொடருமாறு வலியுறுத்தினார்.
அலுவலகத்தை விட்டுசெல்லும் முன், அவர் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் உணவகத்தில் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். நிகழ்வின் நிறைவாக 1 ம் படையின் அனைத்து அதிகாரிகளாலும் வெளிச்செல்லும் தளபதிக்கு பாராட்டுச் சின்னம் மற்றும் பிரியாவிடை இரவு விருந்தும் வழங்கப்பட்டது.