09th October 2024 12:30:30 Hours
மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 07 ஒக்டோபர் 2024 அன்று மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21 வது தளபதியாக பதவியேற்றார்.
வருகை தந்த மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதிக்கு 23 வது விஜயபாகு காலாட் படையணியி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இந்நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் தளபதி மரக்கன்று ஒன்றை நட்டதுடன், குழுப்படமும் எடுத்துக் கொண்டார்.
பின்னர், மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தில் தனது கடமைகளை ஏற்று ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
சம்பிரதாயங்களுக்கமைய மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் உணவகத்தில் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
பின்னர், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் பிரிகேடியர் பொதுப் பணிநிலை, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி மற்றும் அனைத்து பணிநிலை அதிகாரிகளின் பங்கேற்புடன் கலந்துரையாடல் மண்டபத்தில் தளபதிக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. இறுதியாக, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அனைத்து அதிகாரிகளுக்கும் தனது குழுவில் இணைந்து ஒன்றாக செயல்பட அழைப்பு விடுத்ததுடன் தனது எண்ணங்களையும் தெரிவித்தார். மேலும் வெளிச்சென்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.