05th October 2024 21:04:19 Hours
ஐக்கிய நாடுகளின் பொதுமக்களுக்கான விரிவான பாதுகாப்பு பாடநெறி எண். 02, சர்வதேச அமைதி நடவடிக்கை அமைப்பின் அனுசரணையில், 04 ஒக்டோபர் 2024 அன்று இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 23 அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர், விமானப்படையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் பங்களாதேஷ், மங்கோலியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 5 வெளிநாட்டு அதிகாரிகளின் பங்கேற்புடன் செப்டம்பர் 30 முதல் ஒக்டோபர் 04 வரை இப்பாடநெறி நடைப்பெற்றது.
ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த திரு. ரோஜர் டேவிட் ஹகஸ் அவர்களின் தலைமையிலான நான்கு பாட வல்லுநர்கள் குழு இப்பயிற்சியை எளிதாக்கியது. இந்நிகழ்வில் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் எஸ்.ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிறைவு விழாவின் போது பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்களும் கலந்து கொண்டனர்.