05th October 2024 22:31:44 Hours
மேஜர் ஜெனரல் ஜி.எல்.எஸ்.டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 30 செப்டம்பர் 2024 அன்று யாழ். பாதுகாப்பு படையின் புதிய வழங்கல் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த அவரை பணிநிலை அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றதுடன், தலைமையகத்திற்கு முன்னால் அவர் ஒரு மரக்கன்றை நட்டினார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து, அவர் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டதுடன், அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.