Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2024 14:19:10 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கெட் போட்டி மற்றும் இசை நிகழ்ச்சி

2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2024 ஒக்டோபர் 3 ஆம் திகதி தலைமையக விளையாட்டு மைதானத்தில் மென்பந்து கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

ஏழு அணிகள் போட்டியிட்ட இப்போட்டியில் 3வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் ஒழுக்காற்று அணி சாம்பியன்ஷிப்பை பெற்றுக்கொண்டதுடன், தளபதியின் பாதுகாப்பு அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கினார்.

பின்னர் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் 36 சிவில் ஊழியர்கள் ரூ. 5,000. பெறுமதியான உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.