Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2024 17:19:07 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இரத்த தானம்

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் 02 ஒக்டோபர் 2024 அன்று கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இரத்த தானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினர் இத்திட்டதின் வெற்றிக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினர். கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் 120 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இரத்த தானம் செய்தனர்.