03rd October 2024 15:58:10 Hours
இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியும் 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 28 செப்டெம்பர் 2024 அன்று 3 வது இலங்கை கவச வாகன படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த படைத் தளபதி இலங்கை கவச வாகன படையணியின் வீரமரணம் அடைந்த போர் வீரர் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். 3 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி அவரை மரியாதையுடன் வரவேற்றதை தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
இவ் விஜயத்தின் போது, முகாம் வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்த அவர் அனைத்து நிலையினருடன் குழு படம் எடுத்துகொண்டார். பின்னர் கட்டளை அதிகாரியினால் விரிவான விளக்கம் வழங்கப்பட்டதுடன் அனைத்து அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.
அவர் முகாம் வளாகத்தை பார்வையிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவுடன் அன்றைய நாள் நிறைவு பெற்றது. அவர் செல்வதற்கு முன், அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.