28th September 2024 19:30:41 Hours
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இயந்திரவியல் காலாட் படையணியின் 17 வது படைத் தளபதியாக 2024 செப்டெம்பர் 26 அன்று தம்புலுஹல்மில்லவெ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
படையணியின் புதிய படைத் தளபதியை இயந்திரவியல் காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஏ.கே பீரிஸ் ஆர்எஸ்பீ அவர்கள் பேரவை உறுப்பினர்களுடன் வரவேற்றார். பின்னர் புதிய படைத் தளபதிக்கு இயந்திரவியல் காலாட் படையணி படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, படையணியின் புதிய படைத் தளபதி இயந்திரவியல் காலாட் படையணி போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சிரேஷ்ட அதிகாரிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
சம்பிரதாயத்திற்கமைய புதிய படைத் தளபதி முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்த அவர்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், படையணியின் படைத் தளபதி உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இயந்திரவியல் காலாட் படையணியின் 2007ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து அதன் பேரவை உறுப்பினராக இருக்கும் அவர் இயந்திரவியல் காலாட் படையணியின் 17 வது படைத் தளபதியாக நியமிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பம்சமாகும்.