18th October 2020 10:40:36 Hours
53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் தம்புள்ளையில் அமைந்துள்ள எயார்மொபைல் படையணித் தலைமையகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பட்டாலியன்களுக்கான தனது விஜயத்தினை ஒக்டோபர்16-19 ஆம் திகதிகளில் மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தின் போது, படைத் தளபதியவர்கள் எயார்மொபைல் படையணித் தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படைத் தலைமையக அலுவலக கட்டிடத் தொகுதி மற்றும் புதியவொரண்ட் அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட் உணவரைக் கட்டிடம் ஆகியவற்றினை திறந்து வைத்தார்.
மேலும், அவர் 12 ஆவது இலங்கை சிங்க படையணி, 1 ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 ஆவது கெமுனு ஹேவா படையணி பட்டாலியன் உள்ளிட்ட படையணிகளுக்கான தனது விஜயத்தினையும் மேற்கொண்டார். அங்கு அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வில் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர். Running sport media | NIKE RUNNING SALE