27th May 2020 09:00:31 Hours
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பை ஏற்று ஓய்வு பெற்ற வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிரி அவர்கள் (26) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து எதிர்கால சேவை ஓய்வு வாழ்விற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தர்மசிரி அவர்களுக்கும் இடையில் தனது எண்ணங்களையும், கடந்தகால நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டார். தனது. முப்பது வருட கால சேவையில் மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை சிங்க படையணியின் பல முக்கிய நியமனங்களை வகித்தவர்.
ஓய்வு பெற்றும் மேஜர் ஜெனரல் தர்மசிரி அவர்கள் இராணுவத் தளபதி ஆலோசணைகளுக்கும் வாழ்துக்கும் நன்றி தெரிவித்தார். இறுதியில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் சேவை நலன் பாராட்டி ஒரு சிறப்பு நினைவு சின்னத்தை வழங்கினார். Authentic Nike Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp