26th May 2020 19:56:31 Hours
முப்படையினரின் முகாம்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகளை மேற் கொள்வதற்காக ஜனாதிபதி செயலணி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம், 23 ஆவது மற்றும் 24 ஆவது படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட்களுக்கு 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விஜயத்தினை மேற்கொண்டனர்.
விமானப் படை மார்ஷலும் மேல் மாகாண ஆளுநருமான ரொஷான் குணதிலக தலைமையிலான பிரதிநிதிகளை குழுவை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாண்டோ அவர்கள வரவேற்றார்.
இதன்போது செயலணி உறுப்பினரான விவசாய மகாவலி கிராம அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன துறை அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுமேத பெரேரா அவர்களால் 24 ஆவது படைப்பிரிவு தலைமையகம், 231 படைத் தலைமையகம் மற்றும் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் 4 ஆவது கெமுனு ஹேவா படையணியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை ஆராய்ந்தார்.
மேலும் விமானப் படை மார்ஷலும் மேல் மாகாண ஆளுநருமான ரொஷான் குணதிலக அவர்களும் மேலும் ஒரு உறுப்பினரும் 22 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தையும் அதன் சூழவுள்ள சில முகாம்களையும் ஆராய்ந்தனர். அட்மிரல் (ஓய்வு) ஜயந்த பெரேரா மற்றும் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்தா பீரிஸ் ஆகியோர் 23 ஆவது படைப்பிரிவு மற்றும் வெலிகந்தை கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் ஆகியவற்றிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
விஜயத்தின் முடிவில் அனைத்து செயலணி உறுப்பினர்களும் தங்களின் அவதானிப்புகள் தொடர்பாக கலந்துரையாடினர். Sneakers Store | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ