08th October 2019 12:07:15 Hours
இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (7) ஆம் திகதி விமானப் படைத் தளபதியான எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களது அழைப்பையேற்று விமானப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
விமானப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை விமானப் படையின் உயரதிகாரியான எயார் வைஷ் மார்ஷல் கெமிலஷ் லேபுரோய் அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ தளபதி அவர்களுக்கு விமானப் படையினரால் கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.
பின்னர் விமானப் படைத் தளபதியை இராணுவ தளபதி அவர்கள் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இரு படைகளுக்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்துவது தொடர்பாகவும், வன்னி மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலை இருவரும் மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து விமானப் படைத் தளபதி அவர்களினால் விமான படையிலுள்ள உயரதிகாரிகளை இராணுவ தளபதி அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இறுதியில் இவர்கள் இருவரது இந்த சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவரும் நினைவு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். பின் இராணுவ தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார். jordan Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff