11th September 2019 08:53:57 Hours
கண்டியிலுள்ள நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையமும் விகாரையுமான ‘ஜய பிரித’ விகாரைக்கு இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியாரும் சேவா வனிதா பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவ நெல்ஷன் அவர்களும் இம் மாதம் (7) ஆம் திகதி வருகை தந்தனர்.
இந்த பௌத்த மத்திய நிலையத்தில் மதிப்புக்குரிய வடுரகும்புர தர்மரத்ன தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஆசிர்வாத பூஜைகளில் இராணுவ தளபதியும் அவரது பாரியாரும் கலந்து கொண்டு ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.
மேலும் இந்த பௌத்த மத ஆசிர்வாத பூஜைகளில் மதிப்புக்குரிய தேரர்களான வரகாஹொட ஞானரத்ன, திம்புல்கும்புரே விமலாதாம்ம, அனுனாயக போன்றோர் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இறுதியில் இராணுவ தளபதியும் அவரது பாரியாரும் மஹா நாயக தேரரிடம் சென்று ‘ அட்டபிரிகர’ வழங்கி அவரிடமிருந்து ஆசிர்வாதங்களை பெற்று விடை பெற்றுச்சென்றனர். bridge media | nike air force 1 shadow , eBay