Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th September 2019 20:44:21 Hours

புதிதாக பதவி உயர்த்தப்பட்ட பொறிமுறை காலாட் படைத் தளபதிக்கு கௌரவ மரியாதை நிகழ்வு

இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியுயர்த்தப்பட்ட பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து அவர்களுக்கு தம்புள்ள ஹலிமில்லாவெவையிலுள்ள தலைமையகத்தில் இம் மாதம் (04) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை இராணுவ தலைமையக மனித உரிமை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் A.G.D.N ஜயசுந்தர அவர்கள் வரவேற்று படையினர்களது பூரன கௌரவத்துடன் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். அத்துடன் தலைமையகத்தில் அனைவரது பங்களிப்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் தளபதி அவர்கள் இணைந்து கொண்டார் .

இறுதியில் படைத் தளபதி அவர்கள் குழுப் புனைப்படத்திலும் இணைந்து கொண்டார். இந்த நிகழ்வில் 11 ஆவது படைப் பிரிவின் திட்டமிடல் அதிகாரி பிரிகேடியர் எல் ஏஸ் பாலசந்திர மற்றும் பொறிமுறை காலாட் படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் எஸ் ஜே பிரியதர்ஷன அவர்கள் இணைந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அன்றைய தினம் கவுன்சில் ஒன்று கூடலும் படைத் தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்றது. அத்துடன் இரவு விருந்தோம்பலும் தலைமையக அதிகாரி விடுதியில் இடம்பெற்றது.jordan Sneakers | Patike