11th July 2019 11:30:22 Hours
சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் லலித் ரத்னாயக அவர்கள் 51 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக இம் மாதம் (8) ஆம் திகதி தனது பதவியை உத்தியோகபூர்வமாக பாரமேற்றார்.
இந்த புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் படைத் தலைமையக வளாகத்தினுள் படையினரால் வழங்கி வைக்கப்பட்டன.
பின்னர் படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Mysneakers | Men's Sneakers