11th July 2019 11:43:11 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் புதிய மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியாக இம் மாதம் (10) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களுடன் பதவியேற்றார்.
பனாகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர். . spy offers | Nike sneakers