Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2019 13:39:47 Hours

மின்சார பொறிமுறை படையணியின் பயிற்சி நிறைவு விழா

பயிற்சி இலக்கம் 43 இன் கீழ் இடம்பெற்ற இலங்கை மின்சார பொறிமுறை படையணியின் பயிற்சி நிறைவு விழா பேராதனை கன்னொருவையில் அமைந்துள்ள மின்சார பொறிமுறை பயிற்சி முகாமில் இடம்பெற்றது.

மின்சார பொறிமுறை படையணியைச் சேர்ந்த 125 பயிலிளவ படை வீரர்கள் இந்த பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மின்சார பொறிமுறை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் வி வீரக்கொடி அவர்கள் வருகை தந்தார். இவரை மின்சார பொறிமுறை படையணியின் கட்டளை அதிகாரியான கேர்ணல் டி எம் ஜி ஜி எஸ் தென்னகோன் அவர்கள் வரவேற்றார்.

இந்த பயிற்சிகளில் அனைத்து துறைகளிலும் திறமையை வெளிக்காட்டிய போர் வீரனாக எஸ் டீ கே என் சபுதந்தரியும், சிறந்த துப்பாக்கி சூட்டாளராக போர் வீரன் டப்ள்யூ ஏ பெஷங்கவும், சிறந்த உடற்பயிற்சியாளராக போர் வீரன் எஸ் எல் சேனாநாயகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இவர்களுக்கு பிரதம அதிதியினால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இறுதியில் இந்த பயிற்சி முகாம் மைதானத்தில் இராணுவத்தினரது அணிவகுப்பு மற்றும் சாகச கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெற்றன. jordan Sneakers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth