26th June 2019 17:49:36 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 651, 652 மற்றும் 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இம் மாதம் 21 – 22 ஆம் திகதிகளில் இராணுவத்தினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முழங்காவில் முன்பள்ளி வளாகத்தினுள் 651 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 (தொ) கஜபா படையணியின் பங்களிப்புடன் சிரமதான பணிகளும், திருமுருக்கன்டி – அக்கராயன்குளம் வீதிகளில் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் 653 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் 100 படை வீரர்கள் மற்றும் பொது மக்களது பங்களிப்புடன் சிவபுரம் சமூக நலன்புரி மண்டபத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமைத்துவம் மற்றும் ஆசிர்வாதத்துடனும், 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது நெறிப்படுத்தல் மற்றும் வழிக்காட்டலின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. buy footwear | Air Jordan