Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2019 09:29:21 Hours

புகையிரத விபத்தில் 6 படை வீரர்கள் பலி

இராணுவ டிரக் வண்டியொன்று கிளிநொச்சியிலுள்ள புகையிரத கடவையை கடக்கும் சமயத்தில் புகையிரத விபத்துக்கு உள்ளாகி அந்த வாகனத்தில் பயணம் செய்த 6 படை வீரர்கள் பலியாகினர்.

இந்த சம்பவம் இம் மாதம் (25) ஆம் திகதி பகல் 1.45 மணிக்கு கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்றது. மேலும் இந்த சம்பவத்தின் இன்னும் ஒரு படை வீரரும் காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இராணுவ வீரர்களான 5 ஆவது மருத்துவ படையணியைச் சேர்ந்த கோப்ரல் டீ ஜி ஏ என் சி ஜயசிரி, கோப்ரல் எஸ் எம் பி கே ஹேரத், 7 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த போர் வீரன் டீ பி டீ எஸ் டி ரொஷான் , 3 ஆவது போர் கருவி படையணியைச் சேர்ந்த எம் சி எஸ் கே திசாநாயக, 4 ஆவது மருத்துவ படையணியைச் சேர்ந்த போர் வீரன் ஆர் எம் எச் சஞ்ஜீவ, 2 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த கே சிறிசேன போன்றோர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

மேலும் 3 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த போர் வீரன் ஆர் டீ எஸ் சாமர காயத்திற்கு உள்ளாகியுள்ளனர். Sport media | Sneakers