24th June 2019 09:30:43 Hours
வவுனியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் பரனகம வித்தியாலய மாணவர்களின் கல்வி தராதரத்தை ஊக்குவிக்கும் முகமாக தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பாடசாலைக்காக மல்டிமீடியா புரொஜெக்டர், 15 கணினிகள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் செலான் வங்கியின் அனுசரனையில் அதன் கூட்டுறவு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவ சிவில் தொடர்பாடல் அலுவலகத்தின் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஜி ஏ எல் கித்சிரி அவர்களது பூரண ஏற்பாட்டுடன் இம் மாதம் (19) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க, 62 ஆவது படைப் பிரிவின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். jordan Sneakers | シューズ