05th June 2019 07:35:03 Hours
மாத்தளை மாவட்டத்தில் இம் மாதம் முதலாம் திகதி ‘அரச சேவை கிராமத்தினுள்’ எனும் கருத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற நிகழ்வுகளில் இலங்கை இராணுவத்தின் கண்காட்சி கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்களது பாவனைகளுக்காக திறந்து வைக்கப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம், 11 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டுடன் சங்கமித்த கல்லூரி வளாகத்தினுள் இந்த இராணுவ கண்காட்சி கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொறியியல் காலாட் படையணி, ஆளனி நிருவாக பணியகம், ஆட்சேர்ப்பு பணியகம், ஊதிய பதிவேடு பணியகத்தின் உயரதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். bridgemedia | Klær Nike