06th June 2019 11:29:50 Hours
அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சரான பீடர் டடன் அவர்கள் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் உள்துறை அமைச்சரை கொழும்பிலுள்ள ஹோல்பேஷ் ஹோட்டலில் இம் மாதம் (4) ஆம் திகதி சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளையும், மறுநிகழ்வுகளை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், இலங்கை இராணுவம் மற்றும் அவுஸ்திரேலிய ஆயுதப்படைகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இறுதியில் இவர்களுக்கு இடையில் புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.
அவுஸ்திரேலிய அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, உதித்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். அத்துடன் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார். Sportswear free shipping | Nike Shoes