03rd June 2019 16:40:55 Hours
இராணுவ பொலிஸ் படைத் தலைமையகத்தின் 29ஆவது நிறைவு ஆண்டு விழாவை முன்னிட்டு (30) ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவ பொலிஸ் படைத் தலைமையகத்தில் கலாச்சார மத நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக பொல்லஹென்கொடையில் அமைந்திருக்கும் இராணுவ பொலிஸ் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.ஜி.டி. சிரிசேன அவர்கள் கலந்து கொண்டார்.
ஆதனைத் தொடர்ந்து வருகை தந்த பிரதம அதிதி அவர்களுக்கு இராணுவப் பாரம்பரிய முறைப்படி படையினரால் படைத் தலைமையக வளாகத்தில் படையினரிடம் உரையாற்றுவதற்கு முன் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை முன்னிட்டு மதிய விருந்தும் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிமித்தம் பிரதம அதிதி அவர்களால் புதிதாக கட்டப்பட்ட சாஜன் உணவகம் மற்றும் படையினர் விடுதி திறந்து வைக்கப்பட்டது. Running sports | Nike React Element 87