Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2019 16:50:15 Hours

61 ஆவது படைப் பிரிவில் 11ஆவது ஆண்டு நிறைவு விழா

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 61 ஆவது படைப் பிரிவின் 11ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு (30) ஆம் திகதி வியாழக்கிழமை கலாச்சார மத நிகழ்வுகள் இடம் பெற்றன.

அதற்கமைய இப் படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.டி.சி.ஜி.ஜே திலகரத்தன அவர்களால் இப் படைப் பிரிவு வளகத்தில் சந்தன மரக் கன்று நடப்பட்டது. அதனை தொடர்ந்து படையினர்களிடம் தொழிற் மற்றும் அதன் ஒழுங்கு முறை தொடர்பான முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்.

அதன்பிறகு மதிய விருந்துபசாரத்தில் அனைவருடனும் கலந்துகொண்டார்.

அடுத்த நாள் 61 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் மகா சங்கத்தின் உறுப்பினர்களுக்கு படையினரால் தானமும் வழங்கப்பட்டது. Nike sneakers | Air Jordan Sneakers