29th May 2019 14:26:30 Hours
இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் ‘துருலிய வெனுவென் அபி’ கருத்திட்டத்திற்கு உதவிகள் அளிக்கும் முகமாக பெஷன் அலங்கார நிறுவனம், GFLOCK தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இம் மாதம் (28) ஆம் திகதி காலை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது இந்த நிறுவன அதிகாரிகளினால் இராணுவ தளபதிக்கு மஹோகனி, கும்புக், பலு, புளி போன்ற 5000 மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
GFLOCK தனியார் நிறுவனத்தின் தலைவர் திரு ரனில் வில்லடகே அவர்களினால் இந்த மரக்கன்றுகள் இராணுவ தளபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன.
'துருலிய வெனுவென் அபி' எனும் தேசிய நலன்களுக்காக இராணுவத்தால் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, சிவில் சமூகங்களை பங்கு கொண்டு ஒரு சரியான கால திட்டமாக மேற்கொண்டு வருகின்றது என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.
இந்த தேசிய திட்டத்தின் மூலம் குடிமக்கள் மற்றும் எமது தலைமுறையினருக்கு ஒரு பெரிய வெற்றிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
நாட்டிற்கு ஏற்படும் சவால்களுக்கு முகமளிப்பதற்கு இராணுவம் ஒரு சிறந்த குழுவாக செயற்படுகின்றதென்று இராணுவத்தை இந்த நிறுவனத்தினர் பாராட்டினார்கள்.bridgemedia | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff