Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2019 17:59:21 Hours

சிஜிஏ உறுப்பினர்களினால் யாழ் குடாநாட்டின் தென்னங்கன்று வளர்ச்சிக்கான பொதுக்கூட்டம்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது அழைப்பையேற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் 100,000 தென்னங்கன்றுகளை நடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பொதுக் கூட்டம் சி.ஜி.ஏ. உறுப்பினர்களின் தலைமையில் தெங்கு விவசாயிகள் சங்கத்தினருக்கு இம் மாதம் (26) ஆம் திகதி இராணுவ தல்செவன ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த ஒன்று கூடலில் சி.ஜி.ஏ. உறுப்பினர்கள் 578 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட 37,000 க்கும் மேற்பட்ட தேங்காய் நாற்றுகள் தொடர்பான முன்னேற்றத்தை பேசியும் யாழ் குடா நாட்டில் தவார பராமரிப்பிற்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஊக்குவிப்பிற்கும் இந்த உறுப்பினர்கள் பராட்டைதெரிவித்தனர்.

இந்த பொதுக் கூட்டத்தில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் பிரியந்த லியனகே, சிஜிஏ தெங்கு வளர்ச்சி சபையின் தலைவர் திரு ஜயந்த விக்ரமசிங்க, கலாநிதி நிஹால் சில்வா, திரு ரஞ்ஜித் மற்றும் பேராசிரியர் மோகனதாஸ் போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.latest Running Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov