Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2019 20:37:10 Hours

ஆனையிறவில் இடம்பெற்ற தேசிய ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வு

எல்டிடிஈ பயங்கரவாதத்தை ஒழித்து 10 வருட தசாப்தாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் முகமாக 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய படை வீரர் தின நிகழ்வு ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி வளாகத்தினுள் இம் மாதம் (21) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வு பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ மத சமய தலைவர்களது ஆசிர்வாத அனுஷ்டானங்களுடன் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் வருகை தந்தார்.

மேலும் இந்த நிகழ்வில் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சம்பத் கொட்டுவேஹொட, 551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அசங்க பெரேரா, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர். Sports brands | adidas Yeezy Boost 350