Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2019 17:55:24 Hours

புளுமெண்டல் குப்பை கிடங்கில் தீடீரென ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்திய இராணுவப் படையினர்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14ஆவது படைப் பிரிவின் படையினர் புளுமெண்டல் குப்பை கிடங்கில் கடந்த சனிக் கிழமை (06) மதியம் தீடீரென ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன் போது 02அதிகாரிகள் உள்ளடங்களான 25 படையினர் 09வாகன ஓட்டுனர்களின் பங்களிப்போடு 14ஆவது படைப் பிரிவின் தளபதியவர்களால் வழங்கப்பட்ட வழிகாட்டலின் கீழ் தீ ஏற்பட்ட பிரதேசத்திற்கு விரைந்து சென்று நிலைமைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இத் தீயானது திடீரென ஏற்படுவதற்கான காரணம் அதிக வெப்பநிலை காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. bridge media | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ