17th March 2019 20:49:39 Hours
2019 ஆம் ஆண்டிற்கான இரண்டு மைல் நீச்சல் போட்டிகள் பலப்பிடியில் உள்ள கடற்கரையில் (16) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.
இந்த போட்டியில்முதல் 25 ஆண் நீச்சலாளிகளும்,7 பெண் நீச்சலாளிகளும் போட்டியில் முடிவடைவை நோக்கி தங்களது திறமையை வெளிக்காட்டி நீச்சல்களை நீந்தி முடிவடைத்தனர்.
பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, இலங்கை நீர் விளையாட்டு சங்கம் இணைந்து இந்த போட்டிகளை ஒழுங்கு செய்திருந்தனர். போட்டிகளில் வெளிநாட்டு 31 நீச்சல் வீரர்கள் உட்பட முழுமையாக 294 ஆண் நீச்சல் வீரர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.
இதில் ஆண் பிரிவில் 21 இராணுவ நீச்சல் வீரர்களும், பெண்கள் பிரிவில் 7 நீச்சல் இராணுவ வீராங்கனைகளும் இணைந்திருந்தனர்.
இந்த போட்டிகளில் இரண்டாவது இடத்தில் இலங்கை மின்சாரம் மற்றும் பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த போர் வீரன் டபிள்யூ.எம்.எம்.பீ.எல் அபேரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த கனர்G.D.C.N. பெரேரா, சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிக் கிண்ணங்களை பெற்றுக் கொண்டார்.
இதேபோல், பாதுகாப்பு சேவை பிரிவினருக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் 75 நிமிடங்களுக்குள் நீச்சல்களை நீந்தி முடித்து பொலிஸ் நீச்சல் வீரர்களுக்கு எதிராக இராணுவ நீச்சல் வீரர்கள் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர்.
இராணுவ நீச்சல் சங்கத்தின் தலைவர்மேஜர் ஜெனரல் எச்.ஜி.ஐ வித்தியானந்த , அவர்களது ஊக்குவிப்பின் மூலம் இந்த போட்டியாளர்கள் தங்களது திறமைகளை இந்த போட்டிகளில் வெளிக் காட்டியுள்ளனர்.
இராணுவ நீச்சல் சங்கத்தின் உபதலைவர் கேர்ணல் கிலிபட் த சொயிஷா, நீச்சல் சங்கத்தின் செயலாளர் கெப்டன் எல்.ஆர்.கே பீரிஸ் மற்றும் இராணுவ நீச்சல் பயிற்றுவிப்பாளர்கள் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர் Sports News | 『アディダス』に分類された記事一覧