14th March 2019 19:02:07 Hours
தேசிய மட்டத்தில் திறமையாக கரம் விளையாடி வெற்றியீட்டிய இராணுவத்தைச் சேர்ந்த இரு வீர, வீராங்கனைகளை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (14) அவரது பணிமனையில் வைத்து சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.
6 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த இராணுவ வீரன் எம்.எம் ஹலால்டீன், 3 ஆவது மகளீர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எம்.டீ.எஸ். ரணவீர அவர்கள் திறமையாக விளையாடி எமது நாட்டிற்கு பெருமையை பெற்றுத் தந்துள்ளனர்.
இவர்களுக்கு இராணுவ தளபதி பரிசுகளையும் வழங்கி கௌரவித்து வைத்தார்.
அச்சந்தர்ப்பத்தில் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க, கரம் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் ரஞ்சித் தர்மசிறி, இராணுவ மகளீர் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஆர்.கே.பீ.எஸ் கெடகுபுரு இணைந்திருந்தனர். spy offers | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys