19th February 2019 10:17:51 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் படைக் கலச் சிறப்பணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களின் தலைமையில் பம்பலபிடியில் அமைந்துள்ள லின்ட்ஷே மகளீர் பாடசாலை மாணவிகளுக்கு மாணவி தலைவி சின்னங்கள் சூட்டும் நிகழ்வு இம்மாதம் (18) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியை அந்த பாடசாலையின் மாணவிகள் கௌரவ அணிவகுப்பு மரியாதைகளை வழங்கி கௌரவித்தனர்.
இந்த பாடசாலையிலுள்ள 50 பாடசாலை மாணவி தலைவிகளுக்கு இந்த சின்னங்கள் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி பாடசாலை மாணவிகளுக்கு மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். Sport media | Nike