Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th February 2019 17:35:03 Hours

வறிய குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் உதவிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள டிகான், புதூர், அம்மன்டானாவெலி, கண்டலடி மற்றும் ஒமடியாமவு போன்ற பிரதேசங்களில் வறுமை கோட்டின் கீழ் வாழும் 150 குடும்பத்தினருக்கும் 100 பாடசாலை மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

23, 233 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘றோயல் என்பீல்ட் ரயிடர்ஷ்’ கழகத்தின் அனுசரனையில் ஒவ்வொரு குடும்பத்தாறுக்கும் 2500/= பெறுமதிமிக்க உலர் உணவு பொருட்களும் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு கதிரவேலி விக்னேஸ்வரா கல்லூரியில் இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் W.A.K.B உதலுபொல, 233 ஆவது கட்டளை தளபதி கேர்ணல் ஆர் எல்விடிகல மற்றும் ‘றோயல் என்பீல்ட் ரயிடர்ஷ்’ கழகத்தின் அனுசரனையாளர்கள் பங்கு பற்றி இந்த நன்கொடைகளை வழங்கி வைத்தனர். affiliate link trace | NIKE AIR HUARACHE