Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th February 2019 15:11:01 Hours

புதிதாக பதிவியுயர்த்தப்பட்ட உயரதிகாரிக்கு தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதைகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களுக்கு இம்மாதம் (8) ஆம் திகதி இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் வைத்து இவரது பதவி உயர்வின் நிமித்தம் கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் இவரது படையணியினால் வழங்கி வைக்கப்பட்டன.

மேஜர் ஜெனரல் குணரத்ன அவர்கள் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த போது இலேசாயுத காலாட் படையணியின் பிரதி கட்டளை தளபதி கேர்ணல் டீ.ஏ.கே திசாநாயக மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் இவரை வரவேற்று இப்படையணியினால் கௌரவ அணிவகுப்பு மரியாதைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் இலேசாயுத காலாட் படையணிக்குரிய ‘கண்டுல’ யானையின் ஆசிர்வாத கௌரவ மரியாதையும் இந்த உயரதிகாரிக்கு வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் சாஜன் தரத்திலிருக்கும் படையினரால் அவர்களது விடுதிகளில் இந்த உயரதிகாரிக்கு பிரியாவிடை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் இந்த உயரதிகாரி இணைந்து கொண்டார்.

இறுதியில் இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகளின் குழுப் புகைப்படத்திலும் இந்த அதிகாரி இணைந்திருந்தார். bridgemedia | Women's Designer Sneakers - Luxury Shopping