Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2019 19:35:06 Hours

இலங்கை அமைதி காக்கும் படையினர்களது விஷேட சேவைகளை கௌரவித்து மாலிப் படைத் தளபதி பாராட்டுகள்

மாலி நாட்டின் ஜக்கிய நாட்டு படையின் கட்டளை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஷ் ஜிலேன்ஷ்போர் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை சந்திப்பதற்கு இராணுவ தலைமையகத்திற்கு (5) ஆம் திகதி வருகை தந்தார்.

வருகை தந்த அதிகாரியை இராணுவ செயலகத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ தளபதியின் பணிமனைக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகா அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் பணிகளின் போது உயிரிழந்த இலங்கை அமைதி காக்கும் படையினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை முதலில் தெரிவித்தார். அத்துடன் இலங்கை அமைதி காக்கும் படையினரது சிறந்த சேவையை இராணுவ தளபதியுடன் பாராட்டினார்.

இலங்கை இராணுவ மின்சார பொறியியலாளர் படையணியின் படையணியினர் எதிர்காலத்தில் அமைதி காக்கும் பணிகளில் கவச வாகனங்கள் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த கனரக வாகனங்களின் விளக்கங்களை இந்த மாலி நாட்டிற்கான ஐக்கிய நாட்டு சபையின் உயரதிகாரிக்கு இலங்கை இராணுவ மின்சார பொறியியலாளர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஏ.ஏ.டீ சிறினாக அவர்கள் விளக்கமளித்தார்.

இந்த சந்திப்பின் போது சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி முகாமின் கட்டளை தளபதி பிரிகேடியர் பி.ஐ பத்திரத்ன, வெளிநாட்டு நடவடிக்கை பணியகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர் பதவியிலுள்ள லெப்டினன்ட் கேர்ணல் எம்.டப்ள்யூ.எஸ் மில்லேகல போன்றோர் இணைந்திருந்தனர்.

இறுதியில் இராணுவ தளபதியின் பணிமனையிலுள்ள பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் வருகை தந்த ஐக்கிய நாட்டுக்கான மாலிக் கட்டளை தளபதி கையொப்பமிட்டார். Nike Sneakers | Women's Sneakers