05th February 2019 09:49:16 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் குடா நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஊக்கத் தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அனுசரனையாளர்களான திரு மோகன் சங்கர் மற்றும் திருமதி வதனி சங்கர் அவர்கள் வழங்கிய நிதி அனுசரனையுடன் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் 2018 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 30 மாணவர்களுக்கு 5000 ரூபாய் பெறுமதிமிக்க புலமைப்பரிசுகள் ஜனவாரி மாதம் (31) ஆம் திகதி வழங்கப்பட்டன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் இந்த புலமைப் பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைந்திருந்தனர். Nike air jordan Sneakers | Air Jordan