Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2019 14:33:28 Hours

வெள்ளத்தினால் பாதிப்படைந்த பொது மக்களுக்கு கிளிநொச்சி படையினரால் உதவிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்த குறைந்த வருமானத்தை பெறும் 41 குடும்பத்தினருக்கு 410 கோழிக் குஞ்சுகள் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இம்மாதம் (2) ஆம் திகதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் புகழ் வாய்ந்த நடிகைகளான வீனா ஜயக்கொடி மற்றும் சேமினி இதமல்கொட அவர்களது அனுசரனையில் இவைகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டன.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் டயலொக் நிறுவனத்தின் அனுசரனையுடன் ஜனவாரி மாதம் 30 – 31 மற்றும் பெப்ரவாரி மாதம் டயலொக் நிறுவனத்தின் அனுசரனையுடன் கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 15 பாடசாலைகளைச் சேர்ந்த 3934 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. affiliate tracking url | Air Jordan