03rd February 2019 23:28:40 Hours
வன்னி பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள் போன்றன வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களால் கடந்த புதன் கிழமை (23) வழங்கப்பட்டது. அந்த வகையில் இக் காலணிகளுக்கான காசோலைகள் மெதவாச்சி ஸ்ரீ சோபித்த மகா வித்தியாலயம் மற்றும் கிரிகல்வௌ மகா வித்தியாலயம் போன்றவற்றிற்கு வழங்கப்பட்டது.
இதற்கான ஒத்துழைப்பை இலங்கை கப்பல் சேவைகளின் திரு ரொகான் மசகோரல அவர்கள் வழங்கியதுடன் 300ற்கும் மேற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளான கலுகுன்னம்மடுவ வித்தியாலயம் ஸ்ரீ சோபித்த மகா வித்தியாலயம் கிரிகல்வௌ மகா வித்தியாலயம் கிரிஸ்தராயன் குளம் மகா வித்தியாலயம்; நெளும் குளம் கலை மகள் வித்தியாலயம் செட்டிக்குளம் மகா வித்தியாலயம் மனிக்பாம் வித்தியாலயம் மரதமடு மகா வித்தியாலயம் லேகேஸ்வரன் வித்தியாலயம் வீரபுரம் மனிவர் மகா வித்தியாலயம் முடியார்குள அரசமி தமிழ் கல்லூரி கரக்கல்புதுக்குளம் வித்தியாலயம் மணியார்குளம் வித்தியாலயம் கண்கள்குளம் மகா வித்தியாலயம் முகுந்தன் குளம் மகா வித்தியாலயம் காமினி மகா வித்தியாலயம் மற்றும் முல்லிக்குளம் ரோமன் கத்தோலிக்க பாடசாலை போன்ற பாடசாலைகளின் சிங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை உள்ளடக்கி வழங்கப்பட்டது. இந் நன்கொடை சுமார் 300 000.00 ருபா பெறுமியாக காணப்படுகின்றது.
இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் குமுது பெரேரா 2(தொண்டர்) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி 2(தொண்டர்) மகளிர் படையணியின் அதிகாரி மற்றும் பல பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Best jordan Sneakers | Nike