Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2019 13:08:37 Hours

குறைந்த வருமானத்தை பெறும் பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் குறைந்த வருமானத்தை பெறும் பாலர் பாடசாலை சிறார்கள் 50 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்ட்டன.

யாழ் குடா நாட்டிலுள்ள சன்முகா, ஜே/பூம்புகார் ஜிடிஎம், அரியாலை முன்பள்ளி சிறார்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் இம்மாதம் (27) ஆம் திகதி அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

தெற்கு மாகாணங்களிலுள்ள நன்கொடையாளர்களான திருமதி முதித வீரசிங்க, திரு சனத் வீரசிங்க அவர்களது அனுசரனையில் இந்த உபகரணங்கள் இந்த சிறார்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அனுசரனையாளர்களான திருமதி முதித வீரசிங்க, திரு சனத் வீரசிங்க, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் நிர்வா பதவியிலிருக்கும் கேர்ணல் ருவன் ஹேரத்கே, பாடசாலை மாணவர்கள் மற்றும் பிள்ளைகள் இணைந்திருந்தனர். latest Nike release | Nike React Element 87