Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2019 22:11:51 Hours

இந்திய அமைதி காக்கும் படையனியில் (IPKF) பலியாகிய இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

கடந்த காலங்களில் சமாதான பணிகள் நிமித்தம் இலங்கைக்கு வந்திருந்த சமயம் தாக்குதலில் பலியாகிய இந்திய அமைதி காக்கும் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினர் நிமித்தம் பலாலியில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபிக்கு சென்று யாழ் இந்திய தூதரகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு எஸ்.

பாலசந்திரன் அவர்கள் அஞ்சலியை செலுத்தினார்.

இந்திய குடியரசின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இம்மாதம் (26) ஆம் திகதி இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

அதன் பின்பு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் உள்ள கேட்போர் கூடத்தில் கலாச்சார நடன நிகழ்வுகளும் இந்த இந்திய தூதரக உயரதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் அஜித் எல்வட்ட மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Mysneakers | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes