21st January 2019 15:50:00 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் இன்னிசை நிகழ்ச்சிகள் (19) ஆம் திகதி சனிக் கிழமை மாலை முல்லைத்தீவு பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த இன்னிசை நிகழ்ச்சிகள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இன்னிசை குழுவினரால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள் அனைத்தும் நெஷ்டல் லங்கா நிறுவனத்தின் அனுசரனையில் இடம்பெற்றது. நிகழ்ச்சியினை பார்வையிடுவதற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, படைப் பிரிவின் படைத் தளபதிகள், படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 591 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு வீரகத்தி இந்து ஆலயத்தில் (16) ஆம் திகதி இராணுவத்தினரது பங்களிப்புடன் விஷேட பூஜைகள் இடம்பெற்றன.best Running shoes | Nike Shoes, Sneakers & Accessories