Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th January 2019 16:12:00 Hours

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாணவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் உதவிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக் காட்டலின் கீழ் 57, 571, 572, 573 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 9 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி, 1 ஆவது சிங்கப் படையணி, 15 (தொ) சிங்கப் படையணியின் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 2280 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

‘செனஹஷ சியபத்த’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மற்றும் டயலொக் நிறுவனத்தின் அனுசரனையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி இந்து கல்லூரி, பன்னிக்கடி அரசு கலவன் பாடசாலை, பாரதி இந்து கல்லூரி, பூனரவி கலவன் பாடசாலை, புனித அந்தோனியார் கல்லூரி, முருசம்மோட்டை கல்லூரி, கன்டவலி மஹா வித்தியாலயம், முருகானந்தன் முன்பள்ளி பாடசாலை, வட்டகச்சி தெற்கு கலவன் பாடசாலை மற்றும் மாயவனூர் கல்லூரயைச் சேர்ந்த 2280 பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மேலும் ‘கெஷ்டர்ஸ்’ பயிற்சி நிலையத்தின் தலைவி செல்வி அனோஜா வீரசிங்க அவர்களது அனுசரனையில் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில்’ தர்மபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தார் 100 பேருக்கு உலர்உணவு பொருட்கள் (21) ஆம் திகதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.Adidas footwear | シューズ