14th January 2019 12:06:51 Hours
52 வது தேசிய கூடைப்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் (12) ஆம் திகதி விமானப்படை உள்ளரங்க விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது. இலங்கை இராணுவ ஆண்கள் அணிக்கும் ஹம்பாந்தோட்ட மாவட்ட அணிக்கும் இடையில் இந்த கூடைப் பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன இந்த போட்டியில் இலங்கை இராணுவ ஆண்கள் அணி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டு மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டது.
இந்த போட்டிகளில் 25 மாவட்டங்களிலுள்ள கூடைப் பந்தாட்ட கழகங்கள் இணைந்து கொண்டன. இவற்றினுள் இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் உட்பட பல்கலைக்கழக அணியினரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
மேலும் பெண்களுக்கான கூடைப் பந்தாட்ட போட்டிகளில் இலங்கை இராணுவ மகளீர் படையணி வணிக சேவைகள் பீஏ கழகத்துடன் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டது.
இந்த போட்டியை பார்வையிடுவதற்கு இராணுவ கூடைப் பந்தாட்ட சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா, இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுத்தசிங்க அவர்கள் பங்கு பற்றிக் கொண்டனர்.trace affiliate link | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify