04th January 2019 15:00:15 Hours
இலங்கையைச் சேர்ந்தவரும் தற்பொழுது நியூசிலாந்தில் வசித்து வரும் திரு ஸ்வயிம் வல்பொல அவர்களினால் ராகம ‘ரணவிரு செவனை’ நிலையத்தில் தங்குவிட வசதிகளுடன் இருக்கும் அங்கவீனமுற்ற படையினரின் சுபசாதனை நிமித்தம் நன்கொடை நிதி வழங்கப்பட்டன.
இந்த நன்கொடை நிதி (4) ஆம் திகதி காலை இராணுவ பணிமனையில் வைத்து இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களிற்கு இந்த நன்கொடையாளரினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
அச்சமயத்தில் நன்கொடையாளரான வல்பொல அவர்களினால் இராணுவத்தினால் தற்பொழுது மேற்கொள்ளப்படும் உச்ச கட்டமான சேவைகளை பாராட்டியதுடன் கொடிய யுத்தத்தின் போது பயங்கரவாதியுடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டிற்காக தங்களது அவயங்களை இழந்த படை வீரர்களுக்கு உதவி செய்வதற்கு நாம் தயாராக இருப்பதாகவும் எதிர்வரும் காலங்களிலும் இவர்கள் நிமித்தம் உதவிகளை மேற்கொள்வதற்காக நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம் என்று கூறினார்.
இச்சந்திப்பின் போது இந்த நன்கொடையாளரின் பாரியார் திருமதி நந்தனி வல்பொல மற்றும் செல்வி மிசேலி அநுரத்த வல்பொல லொகுகே அவர்கள் இணைந்திருந்தனர்.
இலங்கை இராணுவ ஊடக ஆலோசகர் திரு சிசிர விஜயசிங்க அவர்களின் ஒருங்கினைப்புடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது. Nike Sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD