Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2018 12:58:35 Hours

இரத்தினபுரி சுற்றுலா நபர்கள் வில்பத்து காட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 143 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் காணாமல் போன 68 சுற்றுலா நபர்கள் வில்பத்து காட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸாரது வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

143 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாயக அவர்களது தலைமையில் 143 படைப் பிரிவைச் சேர்ந்த படையினர் மணித்தியால கணக்காக இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இவர்கள் மீட்கப்பட்டனர்.

இவற்றினுள் 11 சிறார்கள், 30 பெண்கள் உள்ளடங்குவார்கள். அத்துடன் கொலன்கனாத்த கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினரும் இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பின்னர் புனித ஜீட் தேவாலயத்தில் வைத்து இந்த சுற்றுலா நபர்களுக்கு உணவுகளும் வழங்கப்பட்டன.

இராணுவத்தினரது இந்த பணிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது. latest jordan Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals