Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2018 11:52:00 Hours

பாரிய அளவிலான மாணவர்கள் மற்றும் கற்பிணித் தாய்மார்களுக்கு பாடசாலை மற்றும் போசனைகள் வழங்கி வைப்பு

ஓய்வுபெற்ற கெப்டன்ட் ஜயந்த மற்றும் 2(தொண்டர்) சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பாத்திய ஜயவீர போன்றோரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 25 ஆண் நோயாளர்கள் சூரியவௌவை சேர்ந்த 25 கற்பிணித் தாய்மார்கள் மற்றும் மஹாவெலித்தன ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு போசனை உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றன சினிக் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அதிகாரியான திருமதி தில்ருக்ஷி கங்கொடகே மற்றும் திரு தரங்க கங்கொடகே அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்போடு வழங்கப்பட்டது.

மேலும் வலிக்கந்தை சூரியவௌ பாடசாலை மாணவர்களுக்கு 2(தொண்டர்) சமிக்ஞைப் படையினரால் பாடசாலை உபகரணப் பொருட்கள் போன்றன வழங்கப்பட்டன. மேலும் இந் நிகழ்வுகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனைத் கடந்த திங்கட் கிழமை (17) பொது அனுசரனையாளர்களின் பங்களிப்போடு 222 படையினர் சேருவெர தபஸ்ஸலேன மஹிந்தபுர பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கினர். இதன் போது 110 மாணவர்களுக்கு பாடசாலை உபகரங்கள் குடிநீர் போத்தல்கள் புத்தகங்கள் மற்றும் பல உபகரணங்கள் போன்றன வழங்கப்பட்டன. இதன் போது பிரிகேடியர் தீபால் புஸ்செல்ல மற்றும் பலர் கலந்து கொண்டனர். Running sneakers | Nike