Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2018 12:20:34 Hours

52.14 ஏக்கர் காணிகள் முல்லைத்தீவில் இராணுவத்தினரால் விடுவிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேற்கொள்ளப்பட்ட நத்தார் நிகழ்வுகளுடன் ஜனாதிபதி காரியாலயம் மற்றும் அரசினால் விடுக்கப்பட்ட தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நோக்கில் முல்லைத்தீவு சென் பீட்டர்ஸ் ஆலயத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (18) முல்லைத்தீ|வு அரசாங்க அதிபரான ருபாவதி கேதீஸ்வரன் அவர்களின் பங்களிப்போடு இக் காணிப்பத்திரங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

33.05 பொது மக்களின் காணிகள் 11.59 அரச காணிகள் மற்றும் 7.5 ஏக்கர் வனவிலங்கு திணைக்களத்தின் காணிகள் போன்றன நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் மதத் தலைவர்களின் பங்களிப்போடு இந் நத்தார் தின நிகழ்வுளில் வழங்கப்பட்டது.

இதன் போது மதத் தலைவர்கள் 59ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய மற்றும் 64ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர முல்லைத்தீவு பாதுகாப்பு அரங்க அதிகாரியான பிரிகேடியர் ஜெ ஏ டீ பி ஜயதிலக ஜெனரல் ஸ்டாப் அதிகாரி மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரான திரு ஆர் ரமேஸ் குமார் முல்லைத் தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரியான ஆர் பி சேனாநாயக்க பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Asics footwear | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!